கமதாபாத்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு குஜராத் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.  பல ஆண்டுகளாக பா ஜ க ஆட்சி புரிந்து வருகிறது.  தற்போது விஜய் ரூபானி முதல்வராக இருக்கிறார்.  வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.  தேர்தல் தேதி அறிவிப்பு வெளிவராத நிலையிலேயே தேர்தல் பிரசார வேலைகளை காங்கிரஸ் கட்சி துவங்கி உள்ளது.

மூன்று நாட்கள் குஜராத் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று துவாரகையில் இருந்து தன் பிரச்சாரத்தை துவங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது தேர்தல் பிரச்சார பயணத்தை பாரம்பரிய வாகனமான மாட்டு வண்டியில் அவர் துவங்குவார் என குஜராத் காங்கிரஸ் கட்சித் தலைவர் அறிவித்துள்ளார். தனது பிரச்சாரத்தில் பணமதிப்பீட்டு குறைப்பு நடவடிக்கை, அதனால் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்கள்,  ஜி எஸ் டியினால் உண்டான விலையேற்றம் இது பற்றி பேசுவார் என தெரிய வருகிறது.