டில்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்ற பிறகு முதன்முறையாக இன்று திருப்பதி வருகிறார்.  அங்கு ஏழுமலையானை தரிசித்து விட்டு, மாலை நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ராகுல்காந்தி இன்று நண்பகல் வேளையில் விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்து, அங்கிருந்து கார் மூலம் திருப்பதி செல்கிறார். அங்கு ஏழுமலை யானை தரிசிக்கும் ராகுல், பின்னர், தாரக ராமா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பு ஆற்றுகிறார்.

ஆந்திராவில் ஏற்கனவே சந்திரபாபு நாயுடு, மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு போராடி வரும் நிலையில், இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேச உள்ள ராகுல் காந்தி, இதுகுறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக்கூட்டம்  முடிந்தவுடன் அவர் மீண்டம் டில்லி திரும்புகிறார்.  இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், ஆந்திர மாநில பொறுப்பாளருமான மெய்யப்பன் தெரிவித்துள்ளார்.