கோழிக்கோடு:

தான் பிறந்தபோது அருகில் இருந்து கவனித்துக் கொண்ட நர்ஸ் ராஜம்மாவை ராகுல் காந்தி நேரில் சந்தித்தார்.


3 நாள் பயணமாக தான் வெற்றி பெற்ற கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடம் வடக்கு கேரள மாவட்டங்களான வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

ராகுல் காந்தியை 22 பிரதிநிதிகள் சந்தித்து மனு கொடுத்தனர்.

6 இடங்களில் அவர் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதற்கு முன் கோழிக்கோட்டில், ராஜம்மா என்ற ஓய்வு பெற்ற பெண் நர்ஸை சந்தித்துப் பேசினார்.

ராகுல் காந்தி பிறந்தபோது நர்ஸாக பணியாற்றிய அவரிடம், பழைய நினைவுகளை பற்றி பேசினார்.

அப்போது நர்ஸ் ராஜம்மாவின் குடும்பத்தாரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு நெகிழ்ச்சியாக இருந்தது.