சென்னை,
நாட்டின் அடுத்த பிரதமராக ராகுலும், தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலினும் பதவியேற்பார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு ஆரூடம் கூறி உள்ளார்.
2ஜி வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ராஜா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று பேசிய குஷ்பு தற்போது, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அடுத்த தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறி உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை அருகே உள்ள வேலப்பன்சாவடியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு ஈவிகேஎஸ் இளங்கோவனை வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் பிரதமராக ராகுலும், தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலினும், பதவியேற்பார்கள் என அதிரடியாக பேசினார்.
குஷ்புவின் பேச்சுக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து. தொண்டர்கள் உற்சாகத்தில் முழக்கமிட்டனர்.