சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க,  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வரும் 13ந்தேதி கன்னியாகுமரி வருகை தருகிறார்.  அன்றைய தினம், திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் அறிமுக கூட்டமும் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், ராகுல்காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் சங்க நாதத்தை கேட்க அலைகடலென திரண்டு வாருங்கள் என்று கட்சி தொண்டர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஸ்டாலினுக்கு பாராட்டு:

மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சிகளை அகற்றுவதை நோக்க மாகக் கொண்டு தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயக, மதச்சார்பற்ற, சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகளின் தொகுதி பங்கீடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மறைந்த கருணாநிதி எத்தகைய அணுகுமுறையை கூட்டணி கட்சிகளிடம் பின்பற்றினாரோ, அதைப்போல கால சூழலுக்கேற்ப பரந்த மனப்பான்மை யோடு அரவணைக்கும் போக்கோடு தொகுதி பங்கீட்டை நியாயமான முறையில் அற்புதமாக செய்து முடித்திருக்கிற தி.மு. கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினை மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் லட்சோபலட்சம் தொண்டர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணி கொள்கைக் கூட்டணி.

அதிமுக சந்தர்பவாத கூட்டணி

அ.தி.மு.க. கூட்டணி பேரங்களின் அடிப்படையில் அமைந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி.  நேற்று வரை ஊழல் சேற்றை ஒருவருக்கு எதிராக மற்றொருவர் அள்ளி வீசிக் கொண்டிருந்த கட்சிகள், பேரத்தின் அடிப்படையில் இன்று கூட்டணி அமைத்திருக்கின்றன. எந்த முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்காக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிய கட்சியோடு கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கூட்டணி அமைத்து தமிழகத்திற்கே அ.தி.மு.க. தலைக் குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக மக்களின் வெறுப்பை நிரம்ப சம்பாதித்திருக்கிற பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கைகோர்த்திருக் கிறது. பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்க தயக்கத்தோடு இருந்த அ.தி.மு.க. பா.ஜ.க. அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து கூட்டணியில் சேர வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டி ருக்கிறது. தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிற அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் சேர்த்து மக்கள் பாடம் புகட்ட இருக்கிறார்கள்.

13ந்தேதி ராகுல்காந்தி தமிழகம் வருகை

இந்நிலையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகளின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற மார்ச் 13ம் தேதி புதன்கிழமை கன்னியாகுமரியில் பிற்பகல் 2 மணியளவில் வருகை புரிகிறார்.

அவர் பங்கேற்கிற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். இந்தியாவின் தென்கோடியில் அமைந்தி ருக்கிற கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்க இருக்கிற பிரச்சாரம் நாடு முழுவதும் எதி ரொலிக்கப் போகிறது. தேசியளவில் ஏற்படுகிற மாற்றத்தில் தமிழகம் முன்னணி பங்கு வகிக்கிற வகையில் கன்னியாகுமரி கூட்டம் அமையப் போகிறது.

ஆட்சி மாற்றம் நிகழும் 

கடந்தகால தேர்தல் வரலாற்றின்படி காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியைத் தான் மக்கள் ஆதரித்து, வாக்களித்திருக்கிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் பங்கேற்கிற தி.மு.க. தலைமை யிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழப் போகிறது.  இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமா ? மதத்தின் அடிப்படையில் மக்கள் பிளவுபட வேண்டுமா? வளர்ச்சி வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டிய தேர்தலாக வருகிற நாடாளுமன்றத் தேர்தல் அமையவிருக்கிறது.

நமது தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரிக்கு வருகை புரிகிறார். பெருந்தலைவர் காமராஜரை எந்த கன்னியாகுமரி உயர்த்தி பிடித்ததோ, அங்கே இந்தியாவின் எழுச்சித் தலைவர் ராகுல்காந்தி வருகைபுரிய இருக்கிறார். தேசியளவில் நரேந்திர மோடியை வீழ்த்தப் போகிற மாவீரனாக ராகுல்காந்தி நாடு முழுவதும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

அணிஅணியாக வாருங்கள்…
தேசியளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அவர் தலைமையில் அணி திரண்டு நிற்கின்றன. ராகுல்காந்தி அவர்களை பிரதமராக முன்மொழிந்த தி.மு. கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி பீடுநடை போட ஆரம்பித்திருக்கிறது.

எனவே, என தருமை காங்கிரஸ் நண்பர்களே ! கன்னியாகுமரியை நோக்கி அணிஅணியாக வாருங்கள், அலை அலையாக அணிதிரண்டு வாருங்கள்.

நமது தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சி தலைவர்களின் சங்க நாதத்தை கேட்க எழுச்சியோடு பெருந்திரளாக திரண்டு வரும்படி உங்களில் ஒருவனாக, தோழனாக, நண்பனாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அன்போடு அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.