நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை சந்தித்து,அவர்களிடையே உரையாற்றி வருகிறார். இந்த நிலையில், சாலை பயணத்தின்போது, தெருவோர நுங்குக்கடையில், நுங்கு வாங்கி சுவைத்தார் ராகுல்.

காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி தென்மாவட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தின்  3வது நாளான இன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு சாலையோரம் மக்கள் கூட்டம்கூட்டமாக நின்று வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது, கொட்டாரம் அச்சன்குளத்தில் வாகனத்தை நிறுத்தச்சொல்லி ரோட்டோரம் இருந்த நொங்கு கடையில் நுங்கு சாப்பிட்டு மகிழ்ந்தார். நுங்கை சுவைத்த ராகுல் அது குறித்து கேட்டறிந்ததுடன்,  சுவை  அலாதியாக இருப்பதாக புகழ்ந்தார்.

மக்களோடு மக்களாய் பழகும் எளிமையின் மறு உருவமான தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தெருவோரம் அமைந்த நுங்கு கடைக்குச் சென்று நுங்கு சாப்பிட்டு மகிழ்ந்தது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. ராகுல் நுங்கு சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.