டெல்லி:
கில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள்  தலைவர் ராகுல்காந்தி இன்று மதியம் 1 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மத்தியஅரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வரும், ராகுல்காந்தி,  ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, ரேஷன் கார்டுகள் இல்லாத  மக்களுக்கு உடடினயாக ரேஷன் கார்டுகள் வழங்க வழங்க வேண்டும் என வற்புறுத்திய நிலையில்,  மதியம் ஒரு மணி அளவில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது,  ஊரடங்கு நீட்டிப்பு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் நிலை, அவருக்கு உதவி வழங்க மத்தியஅரசை வலியுறுத்தவது  குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.