பிரிஸ்பேன்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பிரிஸ்பேரில் நடைபெற்றுவரும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின் மூன்றாவது மற்றும் இறுதி செஷன் ஆட்டம் நடைபெற்று வந்தது. இந்திய அணி 2 விக்கெட்டுகளை ஏற்கனவே இழந்திருந்த நிலையில், சத்தீஷ்வர் புஜாராவும், கேப்டன் அஜின்கியா ரஹானேவும் ஆடி வந்தனர்.

புஜாரா 49 பந்துகளை சந்தித்து 8 ரன்களை எடுத்திருந்தார். ரஹானே 19 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

மழை நீண்டநேரம் நீடிக்கும்பட்சத்தில், இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.