சென்னை:

தமிழகத்தில் ஜுன் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெப்பச் சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை சூறைக் காற்றுடன் மழை பெய்தது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.

இன்று 2 டிகிரி கூடுதலாக வெப்பம் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.