சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தென் தமிழகத்தில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று மழைக்கு வாய்ப்பு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வெப்பசலனம் காரணமாக  இன்று (29-ந்தேதி) கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (30-ந்தேதி),  நாளை மறுநாள் 31-ந்தேதி மற்றும் செப்டம்பர்  1-ந்தேதிகளில் வெப்பசலனம் காரணமாக உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்.

சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு ,கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் திருவாரூர் நாகை தஞ்சை ராமநாதபுரம் புதுக்கோட்டை நெல்லை ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தென் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேலும் சென்னையை பொறுத்த வரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப் படும் . அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘குடிதாங்கி 9 செ.மீ., மாமல்லபுரம்8 செ.மீ., கடலூர் கலெக்டர் அலுவலகம் 7 செ.மீ., இளையான்குடி, திருக்கழுக்குன்றம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரியில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.