சென்னை

மிழகத்தில் மேலும் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் ஏற்கனவே நிலை கொண்டுள்ள வலுவான காற்றழுத்த மண்டலம் அதே இடத்தில் இருப்பதால் வட தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு மழை பெய்யக் கூடும்.  இதனால் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  மீனவர்கள் கடலுனுள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.