சென்னை:

டுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக கோவை, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால்  தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசும், இ ந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.