சென்னை

டுத்த 3 நாட்களுக்குத் தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாகத் தமிழகத்தில் கடும் மழை பெய்தது.   மாநிலம் எங்கும் பெய்த கனமழையால் மிகவும் இழப்பு ஏற்பட்டுள்ளது.  இன்னிலையில் தென் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தற்போது தென் மேற்கு வங்கக்கடலில் தெற்கு பதியிலும், அதனை ஒட்டி உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதனால் அடுத்த 3 தினங்களுக்குத் தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யலாம்.  அதே வேளையில் வட தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.