சென்னை: தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். நாமக்கல், கரூர் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி வரை உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையானது அதிகபட்சம் 35 டிகிரி செல்சியாகவும், குறைந்தது 26 டிகிரி செல்சியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.