சென்னை:

சென்னையின் சில இடங்களில் 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் நேற்று பிற்பகல் துவங்கி இரவு விடிய விடிய மழை கொட்டியது. அதிகபட்சமாக தரமணியில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. “சென்னையில் தரமணியில் 19 செ.மீ மழை பெய்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் 18 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலையில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 14 செமீ மழையும் புழலில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும் சென்னையின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.