மும்பை: இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் தவிர்த்து, வெளிநாட்டு டி-20 தொடர்களிலும் ஆடும் வகையில், பிசிசிஐ தனது விதிகளை மாற்றியமைக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா.

மகேந்திரசிங் தோனியைத் தொடர்ந்து, தனது 33 வயதிலேயே ஓய்வை அறிவித்தார் ஐபிஎல் சென்னை அணியில் இடம்பெற்ற சுரேஷ் ரெய்னா.

இந்நிலையில், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ஏற்கனவே வைத்த கோரிக்கையை வழிமொழிந்து, இந்திய வீரர்கள், பிக் பேஷ் லீக்(பிபிஎல்) உள்ளிட்ட இதர வெளிநாட்டு டி-20 தொடர்களில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.

அதற்கேற்ப, பிசிசிஐ அமைப்பின் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்றுள்ளார் ரெய்னா. தற்போதைய நிலையில், இந்தியாவின் இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஐபிஎல் தவிர, வெளிநாடுகளில் நடைபெறும் வேறு எந்த டி-20 தொடர்களிலும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகளின் முக்கியத்துவம் எந்தவகையிலும் குறைந்துவிடக்கூடாது என்ற அடிப்படையிலேயே இந்திய வீரர்கள் வேறு டி-20 தொடர்களில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அப்படியான விதிமுறை தளர்த்தப்பட வேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்துள்ளன.