பாகுபலி படத்தின் இரு பாகங்களையும் பிரமாண்ட வெற்றி பெற வைத்துள்ள எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்து 300 கோடி ரூபாய் செலவில் இயக்கும் புதிய படம் ‘ரவுத்திரம் ரணம், ருத்திரம்’’. ( சுருக்கமாக RRR).

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வாழ்ந்த பழங்குடியின தலைவர்களான அல்லூரி சீதாராம ராஜு, கோமரம் பீம் ஆகியோரின் வரலாற்றை சொல்கிறது, இந்த படம்.

தெலுங்கு நடிகர்கள் ஜுனியர் என்.டி,ஆர். ராம்சரண், இந்தி நடிகர் அஜய் தேவ்கான், பிரிட்டிஷ் நடிகர் இலிவியா மோரிஸ், பாலிவுட் நடிகர் ரேஸ் டீவன்சன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

படப்பிடிப்பு நடத்த இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், இதன் ஷுட்டிங்கை விரைவில் தொடங்க உள்ளார், ராஜமவுலி.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த ராஜமவுலி, இப்போது குணம் அடைந்து வீடு திரும்பி விட்டார்.

‘’ டாக்டர்கள் அனுமதி கொடுத்ததும் இரு வாரங்களில் படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவேன்’’ என்று தெலுங்கு டி.வி. சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார், ராஜமவுலி.

-பா.பாரதி