ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் பாஜக சட்டப்பேரவை பெண் உறுப்பினர் கிரண் மகேஸ்வரி கொரோனாவால் மரணம் அடைந்ததையொட்டி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கிரண் மகேஸ்வரி பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார்.  இவர் இந்த தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கிரண் மகேஸ்வரி மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவு பாஜகவினரை மட்டுமின்றி ராஜஸ்தான் மாநிலத்தில்  பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.  தற்போது 59 வயதாகும் அவர் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜஸ்தான் முதல்வர், சபாநாயகர், மாநில பாஜக தலைவர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத், “ராஜ்சமந்த்  தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் பாஜக தலைவருமான கிரண் ராஜேஸ்வரியின் அகால மறைவால் துயரம் அடைந்தேன்.  அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது உளமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.