ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் மகாத்மா காந்தி சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் சேதப்படுத்தப்பட்டு வந்த நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தானில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், நத்வாரா மாவட்டத்தில் உள்ள ராஜ்சமந்த் பகுதியில் இருந்த மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு தலைவர்களின் சிலை உடைக்கப்பட்ட நிலையில், திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை உடைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து  தமிழகத்தில் பெரியார் சிலை,  உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்துக்கு உட்பட்ட மாவானா பகுதியில் அம்பேத்கர் சிலையை சில சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தினர்.

இந்நிலையில் தேசப்பிதாவான மகாத்மா காந்தி சிலை ராஜஸ்தானில் உடைக்கப்பட்டிருப்பது பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.