துபாய்: கொல்கத்தா அணி நிர்ணயித்த சற்று சவால் இலக்கான 174 ரன்களை விரட்டி வரும் ராஜஸ்தான் அணி, தொடக்கத்திலேயே கடும் சோதனைகளை சந்தித்துவிட்டது.

மொத்தம் 6.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 39 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது அந்த அணி.

இதில் விஷயம் என்னவென்றால், பஞ்சாப் அணி நிர்ணயித்த மிகவும் சவாலான சாதனை இலக்கை விரட்டிப் பிடித்த ராஜஸ்தான் அணியின் தூணாக இருந்த கேப்டன் ஸ்மித் & சஞ்சு சாம்ஸன் ஆகியோர் குறைந்த ரன்களுக்கே ஆட்டமிழந்து விட்டனர்.

துவக்க வீரர் ஜோஸ் பட்லரும் 21 ரன்களுக்கு நடையைக் கட்டிவிட்டார். அடுத்து ராகுல் டெவாஷியா மற்றும் ராபின் உத்தப்பாவை நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ராஜஸ்தான் அணி.

சஞ்சுவின் விக்கெட்டை ஷிவம் மவியும், ஸ்மித்தின் விக்கெட்டை கம்மின்ஸும் கைப்பற்றியுள்ளனர்.