ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனவரி 18ந்தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள்  திறக்கப்படும் முதல்வர் அசோக் கெலாட்  தெரிவித்துள்ளார்.

கொரோனா த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டன. பின்னா்,  மத்திய, மாநில அரசுகள் வழங்கிய   தளா்வுகள் காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு, செப்டம்பா் 21-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சில மாநிலங்களில் பள்ளிகள் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் பங்குபெறும் வகையில் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் 9 மாத இடைவெளிக்குப் பிறகு  ஜனவரி 18ந்தேதி முதல் மீண்டும்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் என அனைத்தும்   திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு ஆலோசனையைத் தொடர்ந்து, கொரோனா வழிகாட்டுதல்களுடன் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், ஜனவரி 18 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் முதல்வர் அறிவித்தார்

இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கெபரோனா வழிகாட்டுதல்களுடன் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் அரசு பயிற்சி நிறுவனங்கள் வகுப்புகள் ஜனவரி 18 முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் பணி தொடங்கப்பட உள்ளதால், மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள்  ஜனவரி 11ந்தேதி திறக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும்,   ஒவ்வொரு வகுப்பிலும் மொத்த எண்ணிக்கையில் 50 சதவீத மாணவா்கள் முதல் நாளிலும், மீதமுள்ள 50 சதவீதம் பேர் இரண்டாவது நாளிலும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.