துபாய்: ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில், 20 ஓவர்களில் 154 ரன்களை எடுத்துள்ளது ராஜஸ்தான் அணி.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் களமிறங்குமாறு ராஜஸ்தானைக் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து பேட்டிங் செய்யத் தொடங்கிய ராஜஸ்தான் அணியில், துவக்க வீரர் ராபின் உத்தப்பா 19 ரன்கள் மட்டுமே அடிக்க, பென் ஸ்டோக்ஸ் 32 பந்துகளில் 30 ரன்களும் அடித்தனர்.
சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 36 ரன்களை அடித்தார். கேப்டன் ஸ்மித் 19 ரன்களையும், ரியான் பராக் 20 ரன்களையும், ஆர்ச்சர் 16 ரன்களையும் அடிக்க, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது ராஜஸ்தான்.
ஐதராபாத் சார்பில், ஜேஸன் ஹோல்டருக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன. ரஷித் கான், 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்து, 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.