துபாய்:

 ரஜினிகாந்தின் 2.0 படத்தின் இசை வெளியீடு துபாயில் நடைபெற உள்ளது. அதையொட்டி இன்று சர்வதேச செய்தியாளர்களுடனான சந்திப்பு துபாய் 7 நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. ஏ.ஆர். ரகுமான் இசையில் பிரமாண்டமாக தயாராகி உள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நாளை  நடைபெறுகிறது.

இதற்காக சினிமா பிரபலங்கள் துபாயில் முகாமிட்டுள்ளனர்.

இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் குழுவினர் இரு ஹெலிகாப்டர்களில் சந்திப்பு நடக்கும் ஹோட்டலுக்கு வந்திறங்கினர்.

ரஜினிகாந்த், எமி ஜாஜ்கசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நிர்வாகி ராஜு மகாலிங்கம் ஒரு ஹெலிகாப்டரிலும், ஷங்கர், ஏஆர் ரஹ்மான், அக்ஷய் குமார் ஆகியோர் இன்னொரு ஹெலிகாப்டரிலும் பறந்தனர்.

பிரஸ் மீட் நடக்கும் 7 நட்சத்திர ஹோட்டலின் மாடியில் அமைந்துள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டர்கள் இறங்கின.

ஹெலிகாப்டரிலிருந்து வந்து இறங்கிய ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

முன்னதாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று  இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து ரஜினிகாந்த் விமானம் மூலம் துபாய் சென்றார். கமல்ஹாசனுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் துபாய் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.