நடிகர் ரஜினிகாந்த் ஒரு 420 (மோசடி பேர்வழி) என்று பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி, இன்றும் தனது தாக்குதலை தொடர்ந்திருக்கிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இன்று பதிவிட்டுள்ளதாவது: இந்திய மீனவர்களிடம் இலங்கை படை கடுமையாக நடந்து வருகிறது. மோசடிப்பேர்வழி ( RK 420) ரஜினிகாந்த் சூதாட்ட செயல்களை விட்டு விட்டு கொழும்புவுக்கு சென்று இவர்களை மீட்டு வர வேண்டியது தானே ?” என்று குறிப்பிட்டுள்ளார்.