சென்னை:
பாஜவின் இன்னொரு முகம்தான் ரஜினிகாந்த் என காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருமாவளவன் தெரிவித்தார்.

அம்பேத்கரின் 64வது நினைவு தினம் டிசம்பர் 6ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காஞ்சிபுரத்துக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஓரிக்கையில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பேட்டியளிக்கையில், ‘‘பாஜவில் அறிவுசார் வளர்ச்சி பிரிவு தலைவராக இருந்து வந்த அர்ஜுன மூர்த்தியை ரஜினி தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். இதன்மூலம் பாஜவின் இன்னொரு முகம் ரஜினி என தெரியவருகிறது. பாஜ, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இவரை நியமித்து இருக்கலாம்’’ என்றார்.