சென்னை:

ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் மாவட்ட நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். 2021ம் ஆண்டில் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களை தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அவர் இணையதளம் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது முதல்முறையாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்ட மக்கள் மன்ற செயலாளராக ரவி, மகளிர் அணி செயலாளராக சங்கீதா, மாவட்ட இளைஞரணி செயலாளராக அருண் ஆகியோரை நியமித்து ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் அறிவிப்பு வெளியிட்டள்ளார். இதர மாவட்டங்களுக்கு விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.