சென்னை: 2021ம் ஆண்டு  ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் எனவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் ரஜினிகாந்த் அறிவித்துஉள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் கட்சித்தொடங்கப்போவதாக கடந்த 2017ம்ஆண்டு அறிவித்த ரஜினி, பின்னர், அதுகுறித்து மேல்நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டார். இதனால், அவரது அரசியல் கட்சி அறிவிப்பு கேலிக்குரியாக விமர்சிக்கப்பட்டு வந்தது.  தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவரது மக்கள் மன்றத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இப்ப வறல்லான்னா எப்போவுமே இல்லை என்று கூறி வருகின்றனர்.இதையொட்டி கடந்தவாரம் தனதுமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரது அரசியல் ஆலோசகர்களில் ஒருவரான தமிழருவி மணியனும் ரஜினியை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், இன்று ஜனவரியில் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில் கூறியிருப்பதாவது,

ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்று தெரிவித்திருப்பதுடன், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிபெற்று,  தமிழகத்தில் நேர்மையான,  நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதிமதச் சார்பற்ற, ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்,  அற்புதம், அதிசயம் நிகழும் என தெரிவித்து உள்ளார்.
ரஜினியின் திடீர் கட்சி அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.