சென்னை

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை ரஜினிகாந்த் வன்மையாக கண்டித்துள்ளார்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.  அதை ஒட்டி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   சுமார் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் நடிகர் ரஜினிகாந்த்,

“தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது வரம்பு மீறி மிருகத்தனமான செயலாகும்.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக அரசு மற்றும் உளவுத்துறையின் தோல்வியை வெளிக்காட்டி உள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவர்கள் குடும்பத்துக்கு நான் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறி உள்ளார்.

அந்த ட்விட்டர் வீடியோ: