குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க சார்பில் வெங்கைய நாயுடுவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தியும்  குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு முடிந்து அதில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வெங்கைய நாயுடு 516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக அவர் பதவி ஏற்கிறார்.

வெங்கைய நாயுடுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர்  பதிவில், ‘மதிப்பிற்குரிய வெங்கைய நாயுடுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மதிப்பிற்குரிய பதவிக்கு நீங்கள் தகுதியானவர்’ என்று ரஜினி தெரிவித்துள்ளார்.