சென்னை

டிகர் ரஜினிகாந்த் கடந்த 2002-03 ஆம் நிதியாண்டில் சுமார் 2.63 கோடி ரூபாய் கடன் அளித்து ரூ.1.45 லட்சம் வட்டி கிடைத்ததாக வருமான வரித்துறைக்குக் கணக்கு அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002-03 மற்றும் 2004-05 ஆகிய நிதி ஆண்டுகளில் வருமானத்தை மறைத்ததாகக் கூறி வருமான வரித்துறை அவருக்கு அபராதம் விதித்திருந்தது.   இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய்பட்டு அதற்குத் தீர்ப்பு வெளியானது.   அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு மேல்முறையீடு மனுவை வருமான வரித்துறை அளித்திருந்தது.

நேற்று முன் தினம் இந்த மேல் முறையீடு மனுவை வருமான வரித்துறை தீடிரென திரும்பப் பெற்றது.  இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதற்காக வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள மனுவின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.   அதில் வருமான வரித்துறைக்கு ரஜினிகாந்த் அளித்த கணக்கு விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002-03 நிதி ஆண்டில் ரூ. 2.63 கோடி கடன் அளித்து அதற்காக ரூ.1.45 லட்சம் வட்டி கிடைத்ததாகக் கணக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நிகர வட்டி வ்ருமானமான ரூ.1.19 லட்சத்துக்கு ஏற்கனவே வரி செலுத்தி விட்டதாகவும் கணக்கு அளித்துள்ளார்.

அத்துடன் கோபால கிருஷ்ண ரெட்டி என்பவருக்கு 18 சதவீத வட்டியில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும்.மற்றும் அர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு 68 லட்சம் வழங்கியதாகவும், 2003-04-ம் நிதியாண்டில் முரளி பிரசாத் என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதில் 2004-05ம் ஆண்டில் ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் கடன் திரும்ப வரவில்லை என்பதால் தமக்கு, 33 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமக்கு.கடன் கொடுப்பதை, தொழிலாகச் செய்யவில்லை என்றும், தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுத்துள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் கூறியதை ஏற்று வழக்கைக் கைவிடுவதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

Thanks :The Hindu