ர்மபுரி

ஜினிகாந்த் தனது அரசியல் கட்சி பற்றி ஜனவரியில் அறிவிப்பார் என அவர் சகோதரர் கூறி உள்ளார்.

ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்.   இன்று தர்மபுரியில் நடைபெற்ற ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துக்க் கொள்ள இவர் தர்மபுரி வந்துள்ளார்.  அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அவர், “ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் அன்புக்கு உரியவராக வாழ்ந்து வருவார்.   ரஜினி அரசியலுக்கு வந்தால் அனைவருக்கு நல்லது செய்வார்.  எனவே அவரை மக்கள் அனைவரும் தேர்ந்தெடுக்க வேண்டும்.  ரஜினிகாந்த் தனது கட்சி பற்றிய அறிவிப்பை வரும் டிசம்பரில் அவர் பிறந்த நாள் அன்று வெளியிட வாய்ப்பே இல்லை.   அவர் இந்த அறிவிப்பை அனேகமாக ஜனவரியில் அறிவிப்பார்” எனக் கூறி உள்ளார்.