நடிகர் சங்கத் தேர்தல் நேற்று ஜூன் 23 மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது.

நேரில் வந்து வாக்களிக்க முடியாதாவர்கள் தபால் வாக்குகள் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் , ஆனால் அதே சமயம் ,அந்த வாக்குகள் அனைத்துமே ஜூன் ௨௨ மாலை 6 மணிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால், ரஜினியால் நேரில் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தபாலில் வாக்களிக்க வாக்கு சீட்டு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டும் காலதாமதமாக கிடைத்ததால் அவரால் தபால் வாக்கு மூலமாகவும் வாக்களிக்க இயலவில்லை.

இது தொடர்பாக ரஜினி தனது ட்விட்டர் பதிவில் “நான் தற்போது மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறேன். நடிகர் சங்கத் தேர்தலுக்கான தபால் வாக்களிப்புச் சீட்டை நான் எவ்வளவு முயன்றும் முன்கூட்டியே பெற முடியாமல் மாலை 6.45 மணிக்குத்தான் பெற்றேன். இந்தத் தாமதத்தினால் நடிகர் சங்கத் தேர்தலில் என்னால் வாக்களிக்க முடியாததற்காக வருந்துகிறேன். இது விசித்திரமானது துரதிர்ஷ்டமானது. இது நடந்திருக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.