.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. குடும்பப் பாங்காக உருவாகும் இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார்.

தீபாவாளிக்கு வெளியிடும் திட்டத் துடன் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வந்தது. கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. லாக்டவுன் முடிந்தசுடன் படப்பிடிப் பை தொடங்கி பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட எண்ணப்பட்டது. தற்போது அந்த திட்டமும் மாறும் நிலைமை உருவாகி இருக்கிறது.
அண்ணாத்த படப்பிடிப்பை அடுத்த 2021 ம் வருடத்துக்கு தள்ளி வைக்கும் படி கேட்டிருக்கிறாராம் ரஜினிகாந்த். படப்பிடிப்பின்போது படக்குழுவி னருக்கு யாருக்கும் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்படக் கூடாது. எனவே அனைவரின் பாதுகாப்பு கருதி படப்பிடிப்பை அடுத்த ஆண்டு தொடங்கலாம் என்று கூறியிருக்கிறாராம். இதனால் பொங்கல் தினத்தில் அண்ணாத்த படம் வெளிவர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் ஏற்படக் கூடாது என்பதால் வலிமை படப் பிடிப்பை தள்ளிவைக்க அஜீத்குமாரும் தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்கிறா ராம். எனவே இப்படமும் பொங்கல் தினத்தில் திரைக்கு வராது என்று தெரிகிறது.