ஜினி நடிக்கும் எந்திரன் 2.0 படத்தின் ட்ரைலர் சென்னையில் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்து உள்ளது.

லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் எந்திரன்  2.0 குறித்த  தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், 2.0 படத்தின் பாடல்கள் அக்டோபர் மாதம் துபாயில் வெளியிடப்படும் என்றும், வரும் நவம்பர் மாதம் ஐராபாத்தில் டீசர் வெளியிடப்படும் என்றும், ஆண்டின் இறுதி மாதமான  டிசம்பரில்  சென்னையில் டிரெய்லர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி  25 அன்று ரஜினியின் எந்திரன் 2.0  வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டாக ரூ. 400 கோடி செலவில், தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தில்,  ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் நடிக்கிறார்.

இந்த படத்தின் கதாநாயகி – ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் – ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.

2.0 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன.