சென்னை,

டிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு வாழ்த்து சொல்ல அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் குவிந்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து போலீசார் விரட்டியடித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு வாழ்த்து சொல்ல அவரது ரசிகர்கள் போயஸ் கார்டனில் குவிந்து வருகின்றனர். பல ரசிகர்கள் ரசிகர் மன்ற கொடியுடன் போயஸ் கார்டன் பகுதிக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வழக்கம்போல ரசிகர்களை சந்திக்காமல் தலைமறைவாகி விட்டார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் அரசியல் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக கருத்து தெரிவித்தி ருந்த நிலையில், பிறந்த நாளான இன்று  அவரது அரசியல் பிரவேசம் குறித்து இன்று ஏதாவது அறிவிப்பார் என எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் போயஸ் கார்டனில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், போயஸ் கார்டன் பகுதியில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.  கொடிகளுடன் சந்திக்க வரும் ரசிகர்களை உள்ளே விடாமல் விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக போயஸ் கார்டன் பகுதியில்  பரபரப்பு நிலவுகிறது.