சென்னை:

ஜினி நடித்துள்ள தர்பார் படம் நாளை மலேசியாவில் வெளியாவது உறுதியாகி உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுபடி லைகா நிறுவனம், முந்தைய கடனுக்கான வங்கி உத்தரவாதம் வழங்கியதைத் தொடர் தர்பார் நாளை மலேசியாவில் திட்டமிட்டபடி வெளியாகிறது.

ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தர்பார் படம் நாளை உலகம் முழுவதும் வெளி யாகிறது. இதற்கிடையில், படத்தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், மலேசிய நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்க வேண்டிய கடனுக்காக தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட  தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில்,  மலேசிய நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகையில், ரூ. 4.9 கோடிக்கு வங்கி உத்தரவாதத்தை அளித்தால் மட்டுமே  மலேசியாவில் படத்தை வெளியிடலாம் என்று அறிவுறுத்தி இருந்தது.

இதனால் தர்பார் படம் மலேசியாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. அதையடுதது,  மலேசிய நிறுவனத்துக்கு லைகா நிறுவனம்  வங்கி உத்தரவாதம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தர்பார் படம் திட்டமிட்டபடி மலேசியாவில் நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.