டில்லி:
மத்திய உள்துறை செயலாளராக ராஜீவ் கவுபா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இவரது பணிக்காலம் 2 ஆண்டுகள்.
1982 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் கவுபா 1982 ம் ஆண்டு ஜார்க்கண்டில் ஐ.ஏ.எஸ் பொறுப்பை ஏற்றார். கடந்த 2017ம் ஆண்டு மத்திய உள்துறை செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.
இந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சரவையின் செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ராஜீவ் கவுபா, மத்திய, மாநில அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின். முக்கிய பொறுப்புகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.