சென்னை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மீது சிறையில் கொடூர தாக்குதல் நடந்துள்ளது.
perarivalan_hosp_1453096572
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மீது சக கைதியான வட இந்தியாவைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவர் இரும்புக் கம்பியால் பலமாக தாக்கினார். இதில் பேரறிவாளனுக்கு பேரறிவாளனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது  கையில் ஆறு தையல்கள் போடப்பட்டுளன.
அறை மாற்றுவதில் ராஜேஷ் கண்ணா ஆத்திரமாகி தாக்கினார் என்றும், செல்போன் பிடிபட்டது காரணம் என்றும் இருவேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.