இறைவன் முருகப்பெருமானின் கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பி சமூகவலை தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ராஜ்கிரண் வெளியிட்டுள்ள அறிகையில் கறியது:
ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலே னும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவர்களது சுதந்திரம். முருகப்பெருமானை நம்பு வோர்க்கு,”கந்தர் சஷ்டி கவசம்” என்பது,
“ஒரு பாதுகாப்பு அரண்”. இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்து வரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன. இறைவனை நம்பாதோர்க்கு,”நம்பாமை” என்பது, அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு,”நம்புதல்” என்பது,

அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான், மேன்மையானது.தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது, மிகவும் கீழ்மையானது…
இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில்,
நோயோடும், நோய் பயத்தோடும், பொரு ளாதார சீர்கேட்டோடும், உண்ண உணவின்றி கோடிக்கணக்கான நம் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில், யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம் இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.
இவ்வாறு ராஜ்கிரண் தெரிவித்திருகிறார்.
பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகர் சவுந்திராஜா கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பியவர்களுக்கு கண்டனம் தெரிவித்திருக் கிறார், அவர் வெளியிட்டிருக்கும் மெசேஜில், ’பகுத்தறிவு என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகப்பெருமானை அவதூறாக பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாத்தீகம் என்ற பெயரில் பிறர் வழிபாட்டு நம்பிக்கையை இழிவாக பேசுவதால் துவேஷம் பெறுமே யன்றி வேறு எதுவும் நிகழாது. ஓம் சரவணபவ’ எனக் கூறி உள்ளார்.
#