கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பார் என்று எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வைரமுத்து பாலியல் புகார்களில் சிக்கியவர், இந்து கடவுளை அவமதித்தவர் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஒருவருக்கு மத்திய அமைச்சர் கையால் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதா என்று கூறி சமூக வலைதளங்களில் கொந்தளித்தார்கள்.

அவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான சின்மயி அந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்து ட்வீட் செய்திருந்தார்.

சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு அடங்கும் முன்பு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று ராஜ்நாத் சிங் தற்போது தெரிவித்துள்ளாராம்.

ராஜ்நாத் சிங் வராவிட்டாலும் பட்டமளிப்பு விழா குறிப்பிட்ட தேதியில் வேறு சிறப்பு விருந்தினருடன் நடக்க உள்ளதாம். ஆனால் அந்த விழாவில் வைரமுத்துவுக்கு பட்டம் அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.