சென்னை:

ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவையொட்டி அவரது குடும்பத்தினருக்கு  தமிழகஅரசு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

ஊடகத்துறையின்  மூத்த  ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ராஜ்டிவியில் பணியாற்றி வந்த வேல்முருகன் கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று  வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு  ஊடகத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேல்முருகன் மறைவுக்கு  துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித்தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினி, அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்பல பல்வேறு கட்சியினர்,  ஊடக அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்,  கொரோனாவால் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது  குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.