டெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் இன்று தொடங்கியது. அப்போது வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால் அதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். காலை முதல் பல முறை ஒத்தி வைக்கப்பட்ட அவை பின்னர் தொடர் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அவையை நாளை காலை வரை ஒத்தி வைத்து, அதன் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.