சென்னை:

மிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் 3 பேர் யார் என்பதை அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.

அதன்படி,  கே.பி. முனுசாமி, ஜி.கே. வாசன், தம்பிதுரை ஆகியோர் போட்டிடுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோர் அறிவிப்பு  வெளியிட்டு உள்ளனர். அதில்,  அதிமுக ஆட்சிமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமிக்கும், எடப்பாடி ஆதரவாளர்கள் தம்பிதுரை மற்றும், கூட்டணி கட்சியான தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்  பெயரும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலங்களவையில் தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து 6 புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தற்போதைய தமிழக சட்டமன்ற கட்சி  எம்எல்ஏக்கள் விகிதாசாரப்படி,  அண்ணா.தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும், தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.