தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் படப்பிடிப்புகள் ஏதுமின்றி வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையை கடந்து வரும் அவரது கையில் மதுபான பாட்டில்கள் இருப்பதாகவும். மதுபானக்கடையில் இருந்து அதனை வாங்கிக்கொண்டு வெளியில் வருவதாகவும் கூறி நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


இதனால் கோவம் அடைந்த ரகுல் ப்ரீத் சிங் “‘வாவ்.., மெடிக்கல் ஷாப்பில் மதுபானங்கள் விற்கிறார்கள் என்பதை நான் இதுவரையிலும் அறிந்ததில்லை” என கூறி ரிப்ளை செய்து அத்தனை பேரையும் ஒரே கமெண்டில் ஆஃப் செய்துவிட்டார்.