சண்டிகர்:

பாலியல் பலாத்கார சாமியாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாமியார் ராம் ரஹீம் சிங் தனது 2 பெண் சீடர்களை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங் இன்று தண்டனை விபரங்களை அறிவித்தார்.

முதல் கட்ட தகவலில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சிறைத் தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இதனால் சாமியார் ராம் ரஹீம் சிங் 20 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கும் தலா ரூ. 14 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.