சென்னை:

ரும் 25ம் தேதி கடலூரில் ராமசாமி படையாச்சியார் சிலை, மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று திறந்து வைக்கிறார்.  இதற்கான அழைப்பிதழை  அமைச்சர்கள் சிவி சண்முகம், எம் சி சம்பத், துரைக்கண்ணு, கே சி வீரமணி ஆகியோர் முதல்வரிடம் நேரில் வழங்கினர்.

கடலூர் மாவட்டத்தில் ராமசாமி படையாட்சியரின் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் ரூ.2.13. கோடியில்  அமைக்கப்படும்எ ன தமிழக அரசு கடந்தஆண்டு அறிவித்தது. அதையடுத்து கடந்த ஆண்டு (2018) ஆகஸ்டு 28ந்தேதி அதற்கான   நிதி ஒதுக்ககீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி ,கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 16.3348 சதுர மீட்டர் பரப்பளவில் 0.69 ஏர்ஸ் நிலத்தில் (74 ஆயிரத்து 120 சதுர அடி) நினைவு மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்ற வந்தது.

தற்போது, நினைவு மண்டபம் மற்றும் சிலை அமைப்பது தொடர்பான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 25ந்தேதி ராமசாமி படையாச்சியார் சிலை மற்றும் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.