ராமாயணக் கதையின் பெரும்பகுதி, காடும், காடு சார்ந்த இடங்களிலும் நிகழ்ந்ததாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ராமாயண சினிமாவை, முழுவதுமாக, ஸ்டுடியோவில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமாயணக் கதையை தழுவி தெலுங்கில் ‘ஆதிபுருஷ்’ என்ற படம் தயாரிக்கப்படுகிறது.

ஓம் ராவத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ், ராமபிரானாக நடிக்க, சயீப் அலி கான் ராவணனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் இந்தி நடிகை கீர்த்தி சனம், சீதையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வரும் 19 ஆம் தேதி ‘ஆதிபுருஷ்’ படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது.

இதற்காக அங்குள்ள ஸ்டிடுயோ ஒன்றில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

‘ஆதிபுருஷ்’ படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஸ்டிடியோவில் அரங்கம் அமைத்து படமாக்கப்படும் என தெரிகிறது.

பிரபாஸ் தற்போது ‘ராதே ஷியாம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இது காதல் கதையாகும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களில் முடிந்து விடும். இதன் பின், பிரபாஸ், ‘புராண’ புருஷராக தன்னை மாற்றிக்கொள்வார்.

– பா. பாரதி