நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று (ஏப்.18) நடந்தது.

இந்நிலையில் இயக்குனரும் பிரபல நடிகருமான ரமேஷ் கண்ணா வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார். தசரதபுரம் காரியப்பா பள்ளிக்கு வாக்களிக்க சென்றேன். காலை 6 மணி முதல் 7 மணி வரை நின்றேன். அதன் பின் எனது பெயர் பட்டியலில் இல்லை என்று கூறுகிறார்கள்.

பட்டியலில் இல்லை என்றால் என் கையில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறதே என்றேன் . பூத் ஸ்லிப் இல்லை என்று காரணம் கூறுகிறார்கள். ஆனால் அதே வீட்டில் இருக்கும் எனது மனைவியின் பெயர் உள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு முறையாக பதிலளிக்கவில்லை. வாக்களிக்க முடியாமல் போய்விட்டதே என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.