இந்த வாரம் டாஸ்கில் சிறப்பாக செய்த இருவரை தேர்ந்தெடுத்து சொல்லும்படி பிக் பாஸ் கூறினார். அப்போது அர்ச்சனா மற்றும் பாலாஜி ஆகியோரின் பெயரை தான் அனைவரும் கூறினர். அதன் பின் வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக் பாஸ் கூறியபோது ரம்யாவை அனைவரும் தேர்வு செய்தனர்.

ஈடுபாடு இல்லாத போட்டியாளர்கள் இருவரை தேர்ந்தெடுக்க சொன்னபோது ஷிவானி மற்றும் கேபியின் பெயரை தான் அனைவரும் தேர்ந்தெடுக்கின்றனர். அதனால் அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தலைவருக்கான போட்டி நடைபெறுகிறது. இதில் பாலா, அர்ச்சனா மற்றும் ரம்யா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். வலையில் இருந்து பாதுகாப்பாக பையை எடுத்து வரவேண்டும் என்பதே டாஸ்க்கின் விதிமுறை. இதை வேகமாக செய்கிறார் அர்ச்சனா. இறுதியில் அர்ச்சனா ஜெயிப்பது போல் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், கன்ஃபெஷன் ரூமில் பிக்பாஸின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ரம்யா பாண்டியன். எனக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால், அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பேன். கோபம் பற்றி பேசிய ரம்யா, அழுகைக்கு இரண்டு காரணங்களை தெரிவித்தார். உன்மை மற்றும் பொய் என இரண்டு அழுகையும் இந்த வீட்டில் பார்க்கலாம் என தெரிவித்தார். ஒரு கட்டத்தில் ரம்யா பிக்பாஸையே கேள்வி கேட்ட ஆரம்பித்து விட்டார்.