ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்த போது கிடைக்காத பாப்புலாரிட்டி தனது இடுப்பை காட்டி பெற்றவர் ரம்யா பாண்டியன்.

தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக, தனது இடுப்பழகை காட்டி பல புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும் புது படங்களின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து வெறும் டிவி நிகழ்ச்சியில் மட்டுமே தற்போது பங்கேற்று வருகிறார்.

ரம்யா பாண்டியன் அவ்வப்போது ஃபோட்டோஷூட் செய்து, தனது புகைப்படத்தை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், தற்போது மீண்டும் இடுப்பு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அய்யோ மீண்டும் இடுப்பா என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர்.